Posts

பொலநறுவைக்கால இந்துக்கோயில்கள்

Image
இலங்கையில் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலநறுவை ஆகும் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்டு ஜனநாத்ங்கலம் என அழைக்கப்பட்டது. இந்த நகரத்தில் அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள் அலுவலர்கள் எனப்பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காக கட்டப்பட்டனவே பொலநறுவை இந்துக்கோயில்களாகும். ஏனவெ இவை பற்றி விரிவாக நோக்குவோம்

துட்டகைமுனு

Image
 அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் துட்டகாமினியும் ஒருவராவார் காவன்தீசனுக்கும் விகாரமாதேவிக்கும் மகனாக பிறந்த இவரது ஆட்சிக்காலம் கி.மு 161- கி.மு 137 வரையிலான காலப்பகுதி ஆகும். இவன் வரலாற்றை அறிய உதவுகின்ற பிரதானமான நுல் மகாவம்சம் ஆகும்;. 37 அத்தியாயங்களை கொண்ட மகாவம்சத்தில் 11 அத்தியாயங்கள் துட்டகாமினியின் வரலாற்றை குறிப்பிடுவதோடு அதில் நான்கு அத்தியாயங்களில் அரசியல் பணிகள் பற்றியும் ஏழு அத்தியாயங்கள் சமயப்பணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இம்மன்னனின் ஆட்சி சிறப்பு பற்றி நோக்குவோம்.

பொலநறுவைக்கால இந்துக்கோயில்சிற்பம்

Image
பொலநறுவையிலுள்ள கோயில்கள் பெரும்பாலும் இடிந்து அழிந்துவிட்டதால் அவற்றுள் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களிற் பெரும்பாலனவை கிடைக்கவில்லை கிடைத்தனவற்றை பாதுகாக்கப்படமையால் அகழ்வாய்வுகளிலே முற்காலங்களிற் கிடைத்த உருவங்கள் பல இப்போது இல்லாமல் போயுள்ளது. அங்குகிடைத்த வெண்கலச்சிற்பம்  கவர்ச்சிமிக்கவை என்பதால் ஆராய்ச்சியாளரும் தொல்பொருள் திணைக்களத்தாரும் அவற்றிலே கவனம் செலுத்தினார்கள் ஆயினும் பொலநறுவைக் கோயில்களின் அழிபாடுகளில் காணப்பெற்ற சிற்பங்கள்ஒரு உன்னதமான கலைப்பாணியின் குணாம்சங்களை பிரதிபலிக்கும் சின்னங்கள் ஆகும்.

திருக்கேதீஸ்வரம்

Image
புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்களுள்  ஒன்றாகும். இக்கோயில் இலங்கையின் மேற்குக் கடற்கரைப்பகுதியிதிருக்கே ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோயில் வட இலங்கையில் பிரசித்தி பெற்றுள்ள ஆலயமாகும். கேது வழிபாட்டதலமாதலால் இக்கோயில் திருக்கேதீஸ்வரம் என அழைக்கப்பட்டது.என்று ஆய்வாளர்;கள் கூறுகின்றனர். எனவே இவ் ஆலயத்தின் வரலாற்று தொன்மையை நோக்குவோம்.

கோவலன் கூத்து

Image
கிராமிய கூத்துக்களில் கோவலன்கூத்தும் ஒன்றாகும். காவிரிப்பூ¬ம்பட்டினத்து பெருவணிகன் மாசாத்துவானின் மகன்  கோவலன் இவன் கலையுணர்வு வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன் காவிரிபூம்பட்டினத்தும் பெருவணிகன் மாநாய்களின் மகள் கண்ணகி இவள் திருமகள் போன்ற அழகும் அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும் கற்புத்திறமும் கொண்டவன் இவ்விருவரும் மனையாளம் புண்டு இன்புற்று வாழ்ந்தனர்.